ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009
பொக்கிஷம் விமர்சனம் - பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
பொக்கிஷம் - தமிழ் சினிமாவுக்கு
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்த நாள்


சுதந்திர தினத்துக்கு ஒரே ஒரு படம்தான்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009
என்றென்றும் இனியவை - 1
அந்த விதத்துல எனக்கு சின்ன வயசுல தூர்தர்ஷன்ல, ஒளியும் ஒளியும் நிகழ்சசியில அடிக்கடி போடப்பட்ட பாட்டு, மல்லிகை மோகினி படத்துல இருந்து, எஸ்பிபி பாடினதுன்னு நினைக்கிறேன்.
மேகங்களே, இங்கு வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள், யாரென்று சொல்லுங்கள்....
என்ற பாடல் அப்படியே மனதில் பதிந்த ஒன்று. இப்போது கூட ஏதோ ஒரு வேலையாக இருக்கும் போது அந்த பாடல் வடிவம் கண்ணுக்குள் தோன்றி மறையும்.
வெள்ளை ஜிப்பா போட்டுக் கொண்டு நாயகன், ஒரு விரக்தியில் பாடும் பாடல் அது- இடையிடையே பாம்பு வேறு வந்து போகும். இன்றைய தொலைக்காட்சிகளிலும், மியூசிக் சேனல்களிலும் இந்த பாடலை இதுவரை பார்த்ததே கிடையாது.
பதிவில் எழுதப் போகிறோம். சரி யார் நடிகர், இயக்குனர் என அலசிப் பார்த்தேன்.
அந்த படம் வெளிவந்த ஆண்டு, 1979. இயக்கம் - துரை, இசை - ஜிகே வெங்கடேஷ், நடிகர்கள் விக்ரம் ( இவர் வேறு, கந்தசாமி விக்ரம் அல்ல), லதா.
இந்த என்றென்றும் இனியவை, தொடரும்......
கருத்துக்களை வரவேற்கிறேன், அப்படியே கொஞ்சம் ஓட்டு போடுங்கன்னா, மறந்துடாம...நன்றி.
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009
பிளாக்கை சரி செய்ய உதவி வேண்டும்
என்னுடைய பிளாக்கின் ஹோம் பேஜ் ன் மேல் புறம் ஒரு இடைவெளி வருகிறது. அதை சரி செய்ய என்ன வழி. யாராவது உதவி செய்தால் நலமாக இருக்கும்
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
தொலைந்து போன நண்பர்கள்
நண்பர்கள் என்றவுடனே எனக்கு தொலைந்து போன என் நண்பர்களைப் பற்றித்தான் ஞாபகம் வருகிறது. இன்றைய தலைமுறைக்குப் பிரச்சனையில்லை சிறு வயது முதலே, தொலைபேசி, கைபேசி, ஈமெயில், என பல விதங்களில் தொடர்புப் படுத்திக் கொள்ள வழி இருக்கிறது. ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதெல்லாம் கிடையாது.
எனக்கு ஞாபகம் உள்ள வரையில் என்னுடன் ஐந்தாவது வரை படித்த இரு நண்பர்களைப் பற்றி எப்போதுமே மறக்க முடியாது. ஒருவன் விஜயசங்கர், செங்கல்பட்டு அருகிலுள்ள, சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்தவன், இன்னொருவன் குணசேகர், செங்கல்பட்டைச் சேர்ந்தவன். இவன் இறந்து விட்டதாக பல வருடங்கள் கழித்து தகவல் வந்தது. ஐந்தாவது வகுப்பு வரை நான், விஜயசங்கர், குணசேகர் மூவரும்தான் ஒன்றாக அமர்ந்திருப்போம். என்ன வாங்கி சாப்பிட்டாலும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். அதிகமாக செலவு செய்தது குணசேகராகத்தான் இருக்கும். இவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்ட போது மிகவும் வருத்தமடைந்தேன். விஜயசங்கர் இப்போது எங்கிருக்கிறான் என்றே தெரியாது.
அடுத்து ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்த போது எட்டாவது வகுப்பில் சுரேந்திரன் என்ற நண்பன் கிடைத்தான். எனக்கும் அவனுக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். படிப்பு, விளையாட்டு, மற்ற விஷயங்கள் என நானும் அவனும் போட்டி போட்டுக் கொண்டே இருப்போம். ஒரு ஆண்டு விழாவில் அவன் பாட இருப்பதைக் கேள்விப்பட்டு நானும் பாட (?) ஆசைப்பட்டு ஒரு பாடலையும் பாடினேன், முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்...பாடல் அது. இன்றும் அந்த பாடலை முழுவதுமாகப் பாடுவேன். ஒன்பதாவது வந்த போது அவன் திருக்கழுக்குன்றம் சென்று விட்டதாகத் தகவல். அதன் பின் இரண்டு வருடம் கழித்து பத்தாவது முடித்த பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவனை சந்தித்தேன். அதன் பின் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாது.
பள்ளி இறுதியில் படித்த பல நண்பர்களைப் பற்றிய தகவல் கிடையாது, இன்னும் ஏன் கல்லூரியில் உடன் படித்தவர்களில் ஒரு சிலர்தான் தொடர்பில் இருக்கிறார்கள். மற்றவர்களை பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டது.
திடீரென கடந்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பேன், அந்த மறக்க முடியாத நாட்களில் வாழ்ந்த விதமே தனி. சைக்கி்ளில் ஒன்றாகச் செல்வது, கிரிக்கெட் விளையாடியது, கோவில்களில் சுற்றியது, தெருக்களில் விளையாடியது, போன்றவை இன்னும் நெ்ஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய தலைமுறை நண்பர்களைப் பார்த்தால் பொறாமைதான் வருகிறது. இந்த ஈமெயில், கைபேசி எல்லாம் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்திருக்கக் கூடாதா என்று ?
இவை வந்த பின்னும் நண்பர்களைப் பிரிந்திருந்தால், அது நட்பே கிடையாது.
புதன், 15 ஜூலை, 2009
அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்

சனி, 11 ஜூலை, 2009
இந்திர விழா, வாமனன், வைகை - குறைவான விமர்சனம், குறையான விமர்சனம் அல்ல



இந்திர விழா
கதைன்னு சொல்லிக்க பெருசா ஒன்னும் இல்ல. டிவி சேனல்ல ஹெட்டா இருக்கிற ஸ்ரீகாந்துக்கும் அந்த சேனல் ஓனர் மனைவி நமீதாவுக்கும் இடையே நடக்குற சண்டைதான் படத்தோட கதை.
நமீதா அடிக்கடி நீச்சல் உடையில வந்து அசத்தறாங்க
படத்துல பாட்டுலாம் வருது... ஆனால்....
விவேக்கும் இருக்காரு படத்துல....ஆனால்....சிரிப்புத்தான் வரல.....
வாமனன்
சினிமாவுல நடிக்கிற ஆசையில சென்னைக்கு வர்ற ஜெய், தேவையில்லாம ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிறாரு, அதுல இருந்து எப்படி தப்பிக்கிறாருங்கறதுதான் படத்தோட கதை.
தனி ஹீரோவா நடிக்க ட்ரை பண்ற ஜெய் கதையை எப்படி செலக்ட் பண்றதுன்னு கத்துக்கணும். அப்படிதான் ஜெய் ஜெயமாக முடியும்.
லக்ஷ்மி ராய் மாடலிங் நடிகையா வர்றாங்க. பளபளன்னு நீச்சல் உடையில வந்து பார்க்க(?) வைக்கறாங்க.
சந்தானம்தான் படத்தை கொஞ்சம் காப்பாத்தறாரு.
யுவன் இசையாம். சொன்னால்தான் தெரியுது..யுவன் எங்கே உங்க இனிமையான இசை...என்ன ஆச்சி....
வைகை
காதலும் காதல் சார்ந்த இடமும்னு டைட்டில்ல கூடவே வருது.
மதுரை பக்கம் போயி கொஞ்சம் விசாரிச்சால் தமிழ் சினிமாவுக்கு நல்ல நல்ல கதைகள்லாம் கிடைக்கும் போல இருக்குது. கிளைமாக்ஸ்லதான் காட்டறாங்க உண்மைக்கதைன்னு...இன்னும் கொஞ்சம் உருக வச்சிருக்கலாம்.
மற்றபடி படத்துல உண்மையிலேயே யதார்த்தம் நல்லா இருக்கு. ரகசியா பாட்டைத் தவிர.
புதுமுகங்கள்தான் ஹீரோ, ஹீரோயின், ரெண்டு பேருமே குறை வைக்காம நடிச்சிருக்காங்க.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டை, ரீமிக்ஸ் பண்ணி கெடுக்காம அதே டியூனோட வேற பாடகர்களை வச்சி பாட வச்சிருக்காங்க.
வைகை , வாகை சூட வாய்ப்பிருக்கு. மற்றபடி இந்திர விழாவுக்கு விழா எடுக்க முடியுமான்னு தெரியல. வாமனன், வாடிப்போயிருக்காரு.
சனி, 27 ஜூன், 2009
நாடோடிகள் - * நச் * என்று ஒரு திரைப்படம்

வெள்ளி, 26 ஜூன், 2009
வால்மீகி விமர்சனம்
.jpg)

பேப்பர்ல வௌம்பரத்தலாம் பார்த்து மிரசலாயி சும்மா அஸத்த போறாங்கன்னு பார்த்தா, ராமாயணத்த எழுதன வால்மீகி பேர வச்சிட்டு, நம்ம கதைய கொடுத்திருக்காங்கப்பா.
அது ஒண்ணுமில்ல, ஒரே வரில சொல்லிடலாம்பா படத்தோட கதைய. ஒரு பிக்பாக்கெட் திருடன, ஒரு பொண்ணு திருத்த நினைக்கிறா, இதாம்ப படத்தோட கதையே. படம் பாக்கச் சொல்ல தேவையில்லாம இந்த ஆனந்த விகடன் எல்லா படத்துக்கும் மார்க்கு போடுவாங்களே, அது ஞாபகம் வந்துச்சுப்பா. அப்பதான் புரின்ச்சி. மார்க் போடுறது ஈஸி. படிக்கிறது கஷ்டம்பா. (அதாவது படம் எடுக்கிறது). படத்தோட டைரக்டரு, நம்ம சிவாஜி ஷங்கர் கிட்ட தொழில் கத்துக்கனவராம்பா. அவராட்டம் மிரசலா எடுக்கத் தெரியலப்பா. நல்லாத்தான் கதைய யோசிச்சிருககாரு, ஆனால் பெண்டான வீல் கணக்கா திரைக்கதை போயிடுச்சிப்பா.
புதிய பாதை போட நினைச்சி பழைய பாதையை போட்டுட்டாங்கப்பா.
விகடன்தான் எல்லாருக்கும் மார்க்கு போடுவாங்க, இப்ப நம்ம டேர்ன், நாம எல்லாரும் மார்க் போடுவோம்பா...
என் மார்க் 3௦0/100
பின்குறிப்பு- படம் முழுக்க சென்னைத் தமிழ் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு நானும் சென்னைத் தமிழிலேயே எழுதிவிட்டேன். புரியாதவர்கள் மன்னிக்கவும்.
ஞாயிறு, 21 ஜூன், 2009
தமிலிஷில் என்ன நடக்கிறது
நாளை அறிவிப்பாரா இளைய தளபதி விஜய் ?

வியாழன், 18 ஜூன், 2009
நமீதா - அறிமுகம்



புதன், 17 ஜூன், 2009
நயன்தாரா - ஒரு அறிமுகம்



செவ்வாய், 16 ஜூன், 2009
இதுதான் கலாச்சாரமா ?



திங்கள், 15 ஜூன், 2009
தோனி செய்தது நியாயமா ?
நேற்றைய டி௨0 மேட்ச்சில் இந்தியா தோற்றது என்னை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது. முதல் டி௨0 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரை இறுதியில் ஆடக்கூட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம் என சொல்ல முடியாது. தெரிந்தே செய்த தவறுதான் என்று சொல்ல வேண்டும். அதிலும் சமீப காலமாக, சில வருடங்களாக எட்டிப் பார்க்காத அரசியல் இந்திய அணியில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. சில இன்னிங்சில் சிறப்பாக ஆடினார் என்பதற்காக சேவாக், யுவராஜ் போன்ற சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தோனியை கேப்டான ஆக்கியது மிகப் பெரும் தவறு. சிறந்த வீரர்களான அவர்களுக்கு தோனி எப்படிப்பட்ட மரியாதையைக் கொடுக்கிறார் என்பது இப்போது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. அதிலும் சேவாக்கை காயம் காரணமாக அணியை விட்டு திடீரென நீக்கியதும் மாபெரும தவறு. அதை மறைப்பதற்காக தோல்விக்கு பின்னர் அளித்த பேட்டியில் சேவாக் இல்லாததும் ஒரு காரணம் என சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ஆடிய பதினோரு வீரர்கள் என்ன ஆடினார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரையில் வெற்றியடைந்தால் தூக்கிக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஐபிஎல் போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை, ஆர்பி சிங்கைத் தவிர. ஒரு உலகக் போப்பை போட்டிக்கு முன்பாக நீண்ட நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நடத்தியதே ஒரு மாபெரும் தவறு. பார்மில் இல்லாத வீரர்களுடன், ஐபிஎல் ஆடி களைப்படைந்த வீரர்களுடன் ஒரு உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்றதும் தவறான ஒன்றாகும். உலகக் போப்பையையும், தேர்தலையும் காரணமாக வைத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியையே நடத்தாமல் விட்டிருக்கலாம். இப்போது யாருக்கு நட்டம் ? இந்திய அணிக்குத்தானே.
இங்கிலாந்திற்கு எதிராக டாஸ் ஜெயித்த பின் நாம் பேட்டிங் செய்யாமல் விட்டது ஒரு தவறு, பின்னர் ஒரு முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் கத்துக்குட்டியான ரவீந்தர ஜடேஜாவை முன்னால் ஆட வைத்ததும் ஒரு மாபெரும் தவறு.
விளையாட்டிற்கு முன்னுரிமை அளித்த காலம் போய் தற்போது வேறு எவற்றிற்கோ முன்னுரிமை அளிக்கும் காலம் வந்துவிட்டது.
பார்மில் இல்லாத வீரர்களுக்கு முதலில் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். எந்த விதமான அரசியல் விஷயங்களும் வீரர்களுக்குள் வராமல் பார்த்துக கொள்ள வேண்டும்.
வேலை வெட்டியை விட்டு கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை இனியாவது இவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களா ?
ஞாயிறு, 14 ஜூன், 2009
ஆயிரத்தில் ஒருவன் - விரைவில் வருகிறான்(ர்)



இதோ வருது அதோ வருது என போக்கு காட்டிக் கொண்டிருந்த , ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இன்று 14ஜுன் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றின் இசை வெளியீடு இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறுவது இதுதான் முதல் தடவை. பட்ஜெட் எகிறிவிட்டது என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு இருந்து வந்தது. 30கோடிக்கும் மேல் பட்ஜெட் ஆனதாக ஒரு தகவல். பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி நடித்திருககும் படம். ரீமா சென், ஆன்ட்ரியா , மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் இந்த படத்தில் இல்லை. அவருக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். 2009ல் தொடங்கி 7ஆம் நூற்றாண்டுக்கு கதை பயணிப்பதாக ஒரு தகவல். படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் போதே படத்தின் வித்தியாசம் புரியும். இயக்குனர் செல்வராகவனுக்கு இந்த படம் நிச்சயம் பெரிய பேர் சொல்லும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
புதன், 10 ஜூன், 2009
சிம்புவின் போடா போடி-க்கு போட்டியாக வாடி போடி...


சனி, 6 ஜூன், 2009
பிரபுதேவா - நயன்தாரா திருமணம் நிஜமா ?
.jpg)
வியாழன், 4 ஜூன், 2009
எங்கே போகிறார்கள் நம் ஹீரோக்கள்
நல்ல கதைகளுக்கு பஞ்சம், எத்தனையோ பேர் நல்ல கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் மட்டும் அலைந்து கொண்டிருக்கவில்லை, தமிழகம் முழுவதுமே இருக்கிறார்கள். ரஜினி , கமல் இருவர் மட்டும் எப்படி சூப்பர்ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆனார்கள். அவர்கள் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் நல்ல கதைகள் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாதையை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் இரண்டு படம் ஹிட்டான உடனேயே எதற்கோ ஆசைப்பட்டு பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஸ்டைல் என்ற பெயரில் இவர்கள் நடிப்பதும் நம்மை ஐயோ என்று அலற வைத்து விடுகிறது. வராத பொருந்தாத ஒன்றை ஏன் செய்ய வேண்டும்.
பாவம், இவர்கள் நடிக்கும் படங்களின் ஹீரோயின்கள், நான்கு காதல் காட்சிகள், நான்கு பாடல்கள், கொஞ்சம் முத்தம், கொஞ்சம் கோபம் என அவர்களுடைய கடமை முடிந்து விடுகிறது. ஆடைகளில் கூட கொஞ்சம்தான், மொத்தத்தில் கொஞ்சமாகக் கொஞ்சி கொடுத்த வேலையை செய்து விட்டு போய்விடுகிறார்கள்.
இதற்கடுத்து பாடல்கள், கண்டிப்பாக ஹீரோவின் அறிமுகப்பாடல் இருந்தே ஆக வேண்டும், நான் வல்லவன், நான் நல்லவன், சூராதி சூரன், வீராதி வீரன், பார்த்தால் பசு, பா்ய்தால் புலி என்ற ரேஞ்சில் பாடல்கள் இருக்கும். பின்னாடி ஒரு நூறு பேர் ஆடிக் கொண்டிருப்பார்கள். அப்புறம் இரண்டு டூயட் பாடல்கள், நடுவில் ஒரு சோகப் பாடல், கடைசியாக கண்டிப்பாக குத்துப் பாடல், கிளைமாக்சில் பறந்து பறந்து சண்டைய இட்டே ஆக வேண்டும். ராவணனாக இருந்தாலும் பேசிப் பேசியே அவர்களை ராமனாக மாற்ற வேண்டும்.
இப்படி ஒரு பார்முலாவுக்குள் இருந்தால் என்னதான் ஆவது. இந்த ஆண்டில் பசங்க படத்தை் தவிர, ஒரு நல்ல படத்தைப் பார்க்க முடியாதா என நமது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதன், 3 ஜூன், 2009
இளையராஜாவின் தகுதியைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதியில்லை
10வருடங்களில் 100படங்களுக்கு இசையமைத்தும், அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமான ஒரு விருதை வாங்குவதும் பெரிய விஷயமல்ல. மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெறுவதே மிகப் பெரும் விருது. அன்று முதல் இன்று வரை இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒலிக்காத வானொலிகளும் இல்லை, ஒளிக்காத தொலைக்காட்சிகளும் இல்லை.
இந்திப் படங்களுக்கு இசையமைத்து விட்டு இந்திய அளவில் பெயர் வாங்குவதும், ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்து விட்டு பெயர் வாங்குவதும், பெரிய விஷயமில்லை.
எந்த விதமான பின்னணியும் இல்லாமல், எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இந்த அளவிற்கு பெயர் வாங்குவது முக்கியமான விஷயம்.
தயவு செய்து இனிமேலாவது இசைஞானியின் இசையப் பற்றி ஏதும் விவாதிக்காமல் இருப்பது நல்லது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர் VS நடிகை , விமர்சன சண்டை

செவ்வாய், 2 ஜூன், 2009
இசைஞானியை சந்தித்தேன்
ஆயிரம் சொல்லுங்கள் இசை என்றால் இளையராஜா தான், இளையராஜா மட்டும்தான்.
இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்

ஞாயிறு, 31 மே, 2009
திறமையிருந்தும் - 2
வியாழன், 28 மே, 2009
திறமையிருந்தும் அழகிருந்தும்

புதன், 27 மே, 2009
ஒரு ஸ்டார்தான் சூப்பர்ஸ்டாராக முடியும்

சனி, 28 பிப்ரவரி, 2009
ராஜாவின் பக்கம்
ஆஸ்கர் விருதை வென்று வந்த ஆஸ்கர் நாயகனான ஏஆர் ரகுமானே, நேற்று இளையராஜாவைப் பற்றி பேசும் போது அவர் ஆஸ்கர் விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற நிதர்சனமான உண்மையைக் கூறியதே இதற்குச் சான்று.
அன்னக்கிளி தொடங்கி நான் கடவுள் வரை இளையராஜா அவர்களின் இசைப்பயணத்தில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் விதம் ஒரு சுகமானது. எத்தனை ஆயிரம் பாடல்கள், எப்படிப்பட்ட பின்னணி இசை, ஓய்வு இல்லாமல் கூட அவர் உழைத்த காலங்கள், அவருக்காகவே தவம் கிடந்தவர்கள், அவருடைய இனிமையான பாடல்களால் பேரையும் புகழையும் வாங்கியவர்கள், என இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்னக்கிளி, பதினாறு வயதினிலே, கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, கல்யாணராமன், தர்மயுத்தம், அன்பே சங்கீதா, உதிரிப்பூக்கள், உல்லாசப் பறவைகள், நிழல்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூடுபனி, ராஜ பார்வை, அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, பயணங்கள் முடிவதில்லை, மூன்றாம் பிறை , மெட்டி, காதல் ஓவியம், தங்கமகன், அடுத்தவாரிசு, மண்வாசனை, தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, கீதாஞ்சலி, இதயக்கோயில், புன்னகை மன்னன், அம்மன் கோவில் கிழக்காலே, கடலோரக் கவிதைகள், மௌனராகம், எங்க ஊரு பாட்டுக்காரன், நாயகன், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, வெற்றி விழா, கரகாட்டக்காரன், கேளடி கண்மணி, ஈரமான ரோஜாவே, தளபதி, சின்ன தம்பி, என் ராசாவின் மனசிலே, இதயம், தேவர் மகன், செம்பருத்தி, எஜமான், மறுபடியும், மகாநதி, சிறைச்சாலை, காதலுக்கு மரியாதை, வீரா, சேது, ப்ரண்ட்ஸ், காசி, அழகி, பிதாமகன், விருமாண்டி, நான் கடவுள், என எனக்கு ஞாபகம் வந்த சில திரைப்படங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளேன். இவை இளையராஜாவின் இனிய இசைக்கு எடுத்துக்காட்டு.
இசையையும், இளையராஜாவையும் ரசிப்பவர்கள் என்னுடைய இந்த சிறிய கருத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
வெள்ளி, 27 பிப்ரவரி, 2009
இரண்டு மாத தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை
2009ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலை முதலில் பார்ப்போம்.
அ ஆ இ ஈ, வில்லு, காதல்னா சும்மா இல்ல, படிக்காதவன், என்னை தெரியுமா, வெண்ணிலா கபடி குழு, கஜா, சற்று முன் கிடைத்த தகவல், பேட்டராசு, நான் கடவுள், குடியரசு, பெருமாள், சிவா மனசுல சக்தி, தநா 4777, லாடம், தீ, இரு நதிகள் ஆகியவை.
18 படங்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இவற்றில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள், மக்களைக் கவர்ந்த படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம். வெண்ணிலா கபடி குழு, நான் கடவுள் படங்கள் மட்டுமே படைப்பு ரீதியாக கவர்ந்த படங்கள் என எடுத்துக் கொள்ளலாம். மற்ற படங்கள் வெறும் கமர்ஷியலுக்காக எடுக்கப்பட்ட படங்களே. வழக்கமான நகைச்சுவை, குத்துப் பாட்டு, கவர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்தான். சில படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் போய் விட்டன.
2009 ஆரம்பமே கொஞ்சம் ஆட்டத்துடன்தான் ஆரம்பித்துள்ளது. போகப் போக சரியாகி விடுமா ?
வியாழன், 26 பிப்ரவரி, 2009
ராஜா ராஜாதான்
விருதுகள் மட்டுமே ஒருவரின் திறமைக்கு அளவுகோல் அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஏஆர்.ரகுமான் அவர்களுக்கு கிடைத்த விருதுகளுக்காக நாம் நிச்சயம் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அவருடைய சாதனைகளில் இதுவும் ஒரு மணிமகுடம்தான் இன்னும் பல விருதுகள் கிடைக்க அவரை வாழ்த்துவோம்.