


இதோ வருது அதோ வருது என போக்கு காட்டிக் கொண்டிருந்த , ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இன்று 14ஜுன் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றின் இசை வெளியீடு இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறுவது இதுதான் முதல் தடவை. பட்ஜெட் எகிறிவிட்டது என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு இருந்து வந்தது. 30கோடிக்கும் மேல் பட்ஜெட் ஆனதாக ஒரு தகவல். பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி நடித்திருககும் படம். ரீமா சென், ஆன்ட்ரியா , மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் இந்த படத்தில் இல்லை. அவருக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். 2009ல் தொடங்கி 7ஆம் நூற்றாண்டுக்கு கதை பயணிப்பதாக ஒரு தகவல். படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் போதே படத்தின் வித்தியாசம் புரியும். இயக்குனர் செல்வராகவனுக்கு இந்த படம் நிச்சயம் பெரிய பேர் சொல்லும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக