
இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 67வது பிறந்த நாள். 1976ம் ஆண்டு அன்னக்கிளி மூலம் நம்மை இசையால் தாலாட்ட வைத்தவர் இன்று வரை ஏறக்குறைய 33ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற சிறிய ஊரில் பிறந்தவர், இந்த அளவிற்கு பெயரையும் புகழையும் அடைவதென்பது சாதாரண விஷயமல்ல. சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தமிழ்சினிமாவில் இளையராஜா, பாராதிராஜா, வைரமுத்து போன்றவர்களின் வரவு தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றியது என்று சொன்னால் அது மிகையில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசையமைத்து வரும் இளையராஜாவுக்கு ஒவ்வொரு மொழியிலும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.
ஹவ் டு நேம் இட், நத்திங் பட் வின்ட், திருவாசம், சிம்பெனி என சினிமாவித் தவிர அவருடைய திறமைக்கு சான்றாக இருப்பவை இவை.
900படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசைஞானியின் சாதனையை மீண்டும் ஒருவர் முறியடிப்பதென்பது நடக்கக்கூடிய ஒன்றல்ல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அந்த சாதனையாளரை, தமிழ் இசை மன்னனை இன்றைய நாளில் வாழ்த்துவதில் பெருமையடைவோம்.
2 கருத்துகள்:
நல்ல பதிவு. நானும் எழுதியிருக்கிறேன். நேரமிருக்கும்போது வாசியுங்கள்.
ஸ்ரீ....
இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக