சனி, 6 ஜூன், 2009

பிரபுதேவா - நயன்தாரா திருமணம் நிஜமா ?


கடந்த இரண்டு நாட்களாக தமிழ் திரையுலக வட்டாரத்திலும், பத்திரிகை உலக வட்டாரத்திலும் ஒரே பரபரப்பு. பிரபுதேவா, நயன்தாரா இருவரும் திருமணம்செய்து கொண்டு விட்டதாக ஒரே பேச்சு. குறிப்பாக தெலுங்கு திரையுலகத்தில் இருந்துதான் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒரு சில தொலைக்காட்சிகள் இதை செய்தியாக வெளியிட்டதாகவே தகவல். தமிழ் பத்திரிகைகளில் சிலவற்றிலும் இந்த செய்தி வந்து விட்டது. பொதுவாகவே நயன்தாராவைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு கிசுகிசு வந்து கொண்டிருக்கும். மீண்டும் அப்படித்தான் ஒரு கிசுகிசு என பத்திரிகை வட்டாரத்தில் நினைத்துக் கொண்டிருந்தனர்.


மேற்கொண்டு இந்த தகவலை நயன்தாரா வட்டாரத்தில் விசாரித்த போது, இத்தனை நாட்கள் அவர் ஆதவன் படத்திற்காக கல்கத்தாவில் இருந்ததாகவும், தற்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார் எனவும் கூறுகிறார்கள்.


இது மீண்டும் ஒரு வதந்தியா என்பது போகப் போகத்தான் தெரியும்.

கருத்துகள் இல்லை: