ஞாயிறு, 31 மே, 2009

திறமையிருந்தும் - 2

மே 30ம் தேதியன்று மூணார் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவி தேவேந்திரன். யார் இவர் என கேட்கிறீர்களா . மண்ணுக்குள் வைரம் திரைப்படத்தில் அறிமுகமாகி வேதம் புதிது படத்தில் பாராதிராஜாவால் பட்டை தீட்டப்பட்டவர். இதழோடு இதழ் சேரும் நேரம், பொங்கியதே காதல் வெள்ளம், கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம் புது ஓலை , மந்திரம் சொல்வேன் , போன்ற ஹிட்டான பாடல்களுக்கு சொந்தக்காரர். அப்படிப்பட்ட பாடல்களைக் கொடுத்தவர் நீநீநீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைக்கும் படம்தான் மூணார். சினிமாவில் திறமையிருந்தும அதிர்ஷ்டம் இல்லாத ஒரே காரணத்தால் முன்னணிக்கு வராமல் போன எத்தனையோ திறமைசாலிகளில் இவரும் ஒருவர். வேதம் புதிது பாடல்களுக்கு இசையமைத்தது இளையராஜா என இன்னமும் நினைப்பவர்கள் பல பேர். அப்படியிருக்கும் போது எப்பேர்ப்பட்ட திறமைசாலி புகழின் வெளிச்சத்துக்கு வராமல் போனது ஏன் ?

1 கருத்து:

butterfly Surya சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்.