திங்கள், 10 ஆகஸ்ட், 2009

என்றென்றும் இனியவை - 1

நாமெல்லாம் ஒரே சினிமா பாட்டு பைத்தியம்னு சொல்லலாம். அதுலயும் 70கள்லயும் 80கள்லயும் வந்த பாட்டுன்னா அப்படி ஒரு பைத்தியம். சில பாடல்கள் என்ன படம் ஏதுன்னு கூட தெரியாது, ஆனால் பாட்டுலாம் அப்படியே ஞாபகம் இருக்கும்.

அந்த விதத்துல எனக்கு சின்ன வயசுல தூர்தர்ஷன்ல, ஒளியும் ஒளியும் நிகழ்சசியில அடிக்கடி போடப்பட்ட பாட்டு, மல்லிகை மோகினி படத்துல இருந்து, எஸ்பிபி பாடினதுன்னு நினைக்கிறேன்.

மேகங்களே, இங்கு வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள், யாரென்று சொல்லுங்கள்....

என்ற பாடல் அப்படியே மனதில் பதிந்த ஒன்று. இப்போது கூட ஏதோ ஒரு வேலையாக இருக்கும் போது அந்த பாடல் வடிவம் கண்ணுக்குள் தோன்றி மறையும்.

வெள்ளை ஜிப்பா போட்டுக் கொண்டு நாயகன், ஒரு விரக்தியில் பாடும் பாடல் அது- இடையிடையே பாம்பு வேறு வந்து போகும். இன்றைய தொலைக்காட்சிகளிலும், மியூசிக் சேனல்களிலும் இந்த பாடலை இதுவரை பார்த்ததே கிடையாது.

பதிவில் எழுதப் போகிறோம். சரி யார் நடிகர், இயக்குனர் என அலசிப் பார்த்தேன்.

அந்த படம் வெளிவந்த ஆண்டு, 1979. இயக்கம் - துரை, இசை - ஜிகே வெங்கடேஷ், நடிகர்கள் விக்ரம் ( இவர் வேறு, கந்தசாமி விக்ரம் அல்ல), லதா.

இந்த என்றென்றும் இனியவை, தொடரும்......

கருத்துக்களை வரவேற்கிறேன், அப்படியே கொஞ்சம் ஓட்டு போடுங்கன்னா, மறந்துடாம...நன்றி.

கருத்துகள் இல்லை: