புதன், 10 ஜூன், 2009

சிம்புவின் போடா போடி-க்கு போட்டியாக வாடி போடி...




சிம்பு அடுத்து இயக்கி நாயகனாக நடிக்க இருக்கும் படம் போடா போடி, அவருக்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க இருக்கிறார்.




இதனிடையே இந்த டைட்டிலுக்கு எதிராக(?) வாடி போடி என ஒரு படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். அந்த படத்தை இயக்க இருப்பவர் சிம்புவை வைத்து காளை படத்தை இயக்கிய தருண்கோபி. விஷால், சிம்பு இவர்களை வைத்து படத்தை இயக்கி தொந்தரவுகளைத்தான் அனுபவித்தேன் என வெளிப்படையாக கூறியவர் தருண்கோபி. தற்போது வெளிவந்துள்ள மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். தான் நடிக்க வந்ததற்கு காரணம் ஹீரோக்கள் கொடுத்த டார்ச்சர்தான் என்கிறார். அது மட்டுமல்ல, தன்னுடைய படம் ஓடக் கூடாது என்பதற்காக தவறான பிரச்சாரத்திலும், படத்தின் சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.




இவர் அடுத்து புதுமுகங்களை வைத்து இயக்கப் போகும் படத்திற்குத்தான் வாடி போடி என டைட்டில் வைத்திருக்கிறார், சிம்புவின் டைட்டிலுக்குப் போட்டியாக.

கருத்துகள் இல்லை: