நமது ஹீரோக்களுக்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் , ஆக்ஷன் ஹீரேவாகத்தான் ஆக வேண்டும் என்ற நினைப்புதான் இருக்கிறது. யாருக்குமே நல்ல நடிகனாக வேண்டும் என்ற நினைப்பே இல்லை. நல்ல நடிகனாக எப்படி ஆவது, அதற்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஆக்ஷன் கதைகளாகத்தான், அதுவும் பழி வாங்கும் கதைகளாகத்தான் இருக்கிறது. ஒன்று அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்குகிறார்கள், அல்லது காதலியை கொன்றவர்களை பழி வாங்குகிறார்கள், அல்லது அம்மாவின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார்கள், அல்லது காணாமல் போன குடும்பத்தாரைத் தேடி ஊர் விட்டு ஊர் வருகிறார்கள்.
நல்ல கதைகளுக்கு பஞ்சம், எத்தனையோ பேர் நல்ல கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் மட்டும் அலைந்து கொண்டிருக்கவில்லை, தமிழகம் முழுவதுமே இருக்கிறார்கள். ரஜினி , கமல் இருவர் மட்டும் எப்படி சூப்பர்ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆனார்கள். அவர்கள் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் நல்ல கதைகள் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாதையை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் இரண்டு படம் ஹிட்டான உடனேயே எதற்கோ ஆசைப்பட்டு பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஸ்டைல் என்ற பெயரில் இவர்கள் நடிப்பதும் நம்மை ஐயோ என்று அலற வைத்து விடுகிறது. வராத பொருந்தாத ஒன்றை ஏன் செய்ய வேண்டும்.
பாவம், இவர்கள் நடிக்கும் படங்களின் ஹீரோயின்கள், நான்கு காதல் காட்சிகள், நான்கு பாடல்கள், கொஞ்சம் முத்தம், கொஞ்சம் கோபம் என அவர்களுடைய கடமை முடிந்து விடுகிறது. ஆடைகளில் கூட கொஞ்சம்தான், மொத்தத்தில் கொஞ்சமாகக் கொஞ்சி கொடுத்த வேலையை செய்து விட்டு போய்விடுகிறார்கள்.
இதற்கடுத்து பாடல்கள், கண்டிப்பாக ஹீரோவின் அறிமுகப்பாடல் இருந்தே ஆக வேண்டும், நான் வல்லவன், நான் நல்லவன், சூராதி சூரன், வீராதி வீரன், பார்த்தால் பசு, பா்ய்தால் புலி என்ற ரேஞ்சில் பாடல்கள் இருக்கும். பின்னாடி ஒரு நூறு பேர் ஆடிக் கொண்டிருப்பார்கள். அப்புறம் இரண்டு டூயட் பாடல்கள், நடுவில் ஒரு சோகப் பாடல், கடைசியாக கண்டிப்பாக குத்துப் பாடல், கிளைமாக்சில் பறந்து பறந்து சண்டைய இட்டே ஆக வேண்டும். ராவணனாக இருந்தாலும் பேசிப் பேசியே அவர்களை ராமனாக மாற்ற வேண்டும்.
இப்படி ஒரு பார்முலாவுக்குள் இருந்தால் என்னதான் ஆவது. இந்த ஆண்டில் பசங்க படத்தை் தவிர, ஒரு நல்ல படத்தைப் பார்க்க முடியாதா என நமது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
4 கருத்துகள்:
அவர்கள் ஏன் அப்படி போகிறார்கள்? அழைத்துச் செல்வது யார் போன்ற காரணீகள் இங்கே இருக்கின்றன.., தல
யூத் விகடனில் கூட குட் ப்ளாக் என்று போட்டிருந்தார்கள்
கொப்புரான நல்லாருக்கு...!
ம்ம் நிறைய எழுதுங்க!
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
நன்றி கலையரசன் அவர்களே, உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டேன்.
கருத்துரையிடுக