
சனி, 27 ஜூன், 2009
நாடோடிகள் - * நச் * என்று ஒரு திரைப்படம்

வெள்ளி, 26 ஜூன், 2009
வால்மீகி விமர்சனம்
.jpg)

பேப்பர்ல வௌம்பரத்தலாம் பார்த்து மிரசலாயி சும்மா அஸத்த போறாங்கன்னு பார்த்தா, ராமாயணத்த எழுதன வால்மீகி பேர வச்சிட்டு, நம்ம கதைய கொடுத்திருக்காங்கப்பா.
அது ஒண்ணுமில்ல, ஒரே வரில சொல்லிடலாம்பா படத்தோட கதைய. ஒரு பிக்பாக்கெட் திருடன, ஒரு பொண்ணு திருத்த நினைக்கிறா, இதாம்ப படத்தோட கதையே. படம் பாக்கச் சொல்ல தேவையில்லாம இந்த ஆனந்த விகடன் எல்லா படத்துக்கும் மார்க்கு போடுவாங்களே, அது ஞாபகம் வந்துச்சுப்பா. அப்பதான் புரின்ச்சி. மார்க் போடுறது ஈஸி. படிக்கிறது கஷ்டம்பா. (அதாவது படம் எடுக்கிறது). படத்தோட டைரக்டரு, நம்ம சிவாஜி ஷங்கர் கிட்ட தொழில் கத்துக்கனவராம்பா. அவராட்டம் மிரசலா எடுக்கத் தெரியலப்பா. நல்லாத்தான் கதைய யோசிச்சிருககாரு, ஆனால் பெண்டான வீல் கணக்கா திரைக்கதை போயிடுச்சிப்பா.
புதிய பாதை போட நினைச்சி பழைய பாதையை போட்டுட்டாங்கப்பா.
விகடன்தான் எல்லாருக்கும் மார்க்கு போடுவாங்க, இப்ப நம்ம டேர்ன், நாம எல்லாரும் மார்க் போடுவோம்பா...
என் மார்க் 3௦0/100
பின்குறிப்பு- படம் முழுக்க சென்னைத் தமிழ் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு நானும் சென்னைத் தமிழிலேயே எழுதிவிட்டேன். புரியாதவர்கள் மன்னிக்கவும்.
ஞாயிறு, 21 ஜூன், 2009
தமிலிஷில் என்ன நடக்கிறது
நாளை அறிவிப்பாரா இளைய தளபதி விஜய் ?

வியாழன், 18 ஜூன், 2009
நமீதா - அறிமுகம்



புதன், 17 ஜூன், 2009
நயன்தாரா - ஒரு அறிமுகம்



செவ்வாய், 16 ஜூன், 2009
இதுதான் கலாச்சாரமா ?



திங்கள், 15 ஜூன், 2009
தோனி செய்தது நியாயமா ?
நேற்றைய டி௨0 மேட்ச்சில் இந்தியா தோற்றது என்னை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது. முதல் டி௨0 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரை இறுதியில் ஆடக்கூட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம் என சொல்ல முடியாது. தெரிந்தே செய்த தவறுதான் என்று சொல்ல வேண்டும். அதிலும் சமீப காலமாக, சில வருடங்களாக எட்டிப் பார்க்காத அரசியல் இந்திய அணியில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. சில இன்னிங்சில் சிறப்பாக ஆடினார் என்பதற்காக சேவாக், யுவராஜ் போன்ற சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தோனியை கேப்டான ஆக்கியது மிகப் பெரும் தவறு. சிறந்த வீரர்களான அவர்களுக்கு தோனி எப்படிப்பட்ட மரியாதையைக் கொடுக்கிறார் என்பது இப்போது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. அதிலும் சேவாக்கை காயம் காரணமாக அணியை விட்டு திடீரென நீக்கியதும் மாபெரும தவறு. அதை மறைப்பதற்காக தோல்விக்கு பின்னர் அளித்த பேட்டியில் சேவாக் இல்லாததும் ஒரு காரணம் என சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ஆடிய பதினோரு வீரர்கள் என்ன ஆடினார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரையில் வெற்றியடைந்தால் தூக்கிக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஐபிஎல் போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை, ஆர்பி சிங்கைத் தவிர. ஒரு உலகக் போப்பை போட்டிக்கு முன்பாக நீண்ட நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நடத்தியதே ஒரு மாபெரும் தவறு. பார்மில் இல்லாத வீரர்களுடன், ஐபிஎல் ஆடி களைப்படைந்த வீரர்களுடன் ஒரு உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்றதும் தவறான ஒன்றாகும். உலகக் போப்பையையும், தேர்தலையும் காரணமாக வைத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியையே நடத்தாமல் விட்டிருக்கலாம். இப்போது யாருக்கு நட்டம் ? இந்திய அணிக்குத்தானே.
இங்கிலாந்திற்கு எதிராக டாஸ் ஜெயித்த பின் நாம் பேட்டிங் செய்யாமல் விட்டது ஒரு தவறு, பின்னர் ஒரு முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் கத்துக்குட்டியான ரவீந்தர ஜடேஜாவை முன்னால் ஆட வைத்ததும் ஒரு மாபெரும் தவறு.
விளையாட்டிற்கு முன்னுரிமை அளித்த காலம் போய் தற்போது வேறு எவற்றிற்கோ முன்னுரிமை அளிக்கும் காலம் வந்துவிட்டது.
பார்மில் இல்லாத வீரர்களுக்கு முதலில் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். எந்த விதமான அரசியல் விஷயங்களும் வீரர்களுக்குள் வராமல் பார்த்துக கொள்ள வேண்டும்.
வேலை வெட்டியை விட்டு கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை இனியாவது இவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களா ?
ஞாயிறு, 14 ஜூன், 2009
ஆயிரத்தில் ஒருவன் - விரைவில் வருகிறான்(ர்)



இதோ வருது அதோ வருது என போக்கு காட்டிக் கொண்டிருந்த , ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இன்று 14ஜுன் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றின் இசை வெளியீடு இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறுவது இதுதான் முதல் தடவை. பட்ஜெட் எகிறிவிட்டது என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு இருந்து வந்தது. 30கோடிக்கும் மேல் பட்ஜெட் ஆனதாக ஒரு தகவல். பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி நடித்திருககும் படம். ரீமா சென், ஆன்ட்ரியா , மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் இந்த படத்தில் இல்லை. அவருக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். 2009ல் தொடங்கி 7ஆம் நூற்றாண்டுக்கு கதை பயணிப்பதாக ஒரு தகவல். படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் போதே படத்தின் வித்தியாசம் புரியும். இயக்குனர் செல்வராகவனுக்கு இந்த படம் நிச்சயம் பெரிய பேர் சொல்லும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
புதன், 10 ஜூன், 2009
சிம்புவின் போடா போடி-க்கு போட்டியாக வாடி போடி...


சனி, 6 ஜூன், 2009
பிரபுதேவா - நயன்தாரா திருமணம் நிஜமா ?
.jpg)
வியாழன், 4 ஜூன், 2009
எங்கே போகிறார்கள் நம் ஹீரோக்கள்
நல்ல கதைகளுக்கு பஞ்சம், எத்தனையோ பேர் நல்ல கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் மட்டும் அலைந்து கொண்டிருக்கவில்லை, தமிழகம் முழுவதுமே இருக்கிறார்கள். ரஜினி , கமல் இருவர் மட்டும் எப்படி சூப்பர்ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆனார்கள். அவர்கள் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் நல்ல கதைகள் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாதையை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் இரண்டு படம் ஹிட்டான உடனேயே எதற்கோ ஆசைப்பட்டு பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஸ்டைல் என்ற பெயரில் இவர்கள் நடிப்பதும் நம்மை ஐயோ என்று அலற வைத்து விடுகிறது. வராத பொருந்தாத ஒன்றை ஏன் செய்ய வேண்டும்.
பாவம், இவர்கள் நடிக்கும் படங்களின் ஹீரோயின்கள், நான்கு காதல் காட்சிகள், நான்கு பாடல்கள், கொஞ்சம் முத்தம், கொஞ்சம் கோபம் என அவர்களுடைய கடமை முடிந்து விடுகிறது. ஆடைகளில் கூட கொஞ்சம்தான், மொத்தத்தில் கொஞ்சமாகக் கொஞ்சி கொடுத்த வேலையை செய்து விட்டு போய்விடுகிறார்கள்.
இதற்கடுத்து பாடல்கள், கண்டிப்பாக ஹீரோவின் அறிமுகப்பாடல் இருந்தே ஆக வேண்டும், நான் வல்லவன், நான் நல்லவன், சூராதி சூரன், வீராதி வீரன், பார்த்தால் பசு, பா்ய்தால் புலி என்ற ரேஞ்சில் பாடல்கள் இருக்கும். பின்னாடி ஒரு நூறு பேர் ஆடிக் கொண்டிருப்பார்கள். அப்புறம் இரண்டு டூயட் பாடல்கள், நடுவில் ஒரு சோகப் பாடல், கடைசியாக கண்டிப்பாக குத்துப் பாடல், கிளைமாக்சில் பறந்து பறந்து சண்டைய இட்டே ஆக வேண்டும். ராவணனாக இருந்தாலும் பேசிப் பேசியே அவர்களை ராமனாக மாற்ற வேண்டும்.
இப்படி ஒரு பார்முலாவுக்குள் இருந்தால் என்னதான் ஆவது. இந்த ஆண்டில் பசங்க படத்தை் தவிர, ஒரு நல்ல படத்தைப் பார்க்க முடியாதா என நமது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதன், 3 ஜூன், 2009
இளையராஜாவின் தகுதியைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதியில்லை
10வருடங்களில் 100படங்களுக்கு இசையமைத்தும், அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமான ஒரு விருதை வாங்குவதும் பெரிய விஷயமல்ல. மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெறுவதே மிகப் பெரும் விருது. அன்று முதல் இன்று வரை இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒலிக்காத வானொலிகளும் இல்லை, ஒளிக்காத தொலைக்காட்சிகளும் இல்லை.
இந்திப் படங்களுக்கு இசையமைத்து விட்டு இந்திய அளவில் பெயர் வாங்குவதும், ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்து விட்டு பெயர் வாங்குவதும், பெரிய விஷயமில்லை.
எந்த விதமான பின்னணியும் இல்லாமல், எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இந்த அளவிற்கு பெயர் வாங்குவது முக்கியமான விஷயம்.
தயவு செய்து இனிமேலாவது இசைஞானியின் இசையப் பற்றி ஏதும் விவாதிக்காமல் இருப்பது நல்லது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர் VS நடிகை , விமர்சன சண்டை

செவ்வாய், 2 ஜூன், 2009
இசைஞானியை சந்தித்தேன்
ஆயிரம் சொல்லுங்கள் இசை என்றால் இளையராஜா தான், இளையராஜா மட்டும்தான்.
இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்
