சனி, 10 ஜூலை, 2010

ஆனந்தபுரத்து வீடு - விமர்சனம்



சன்டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம், சிதம்பரரகசியம், ருத்ரவீணை போன்ற தொடர்களை இயக்கி புகழ் பெற்ற சின்னத்திரை இயக்குனர் நாகா இயக்கியிருக்கும் முதல் பெரியதிரை படம். அவருக்கு பிடித்த மர்மப் படமாகவே இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்.

சென்னையிலிருந்து மனைவி சாயாசிங், மகன் ( 2 வயது இருக்கும் ) ஆகியோருடன் தனது அப்பா, அம்மா வாழ்ந்த ஊரான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. ஆனந்தவிலாஸ் என்ற பெயருடைய அந்த வீடு, ஒரு பெரிய பழைய காலத்து பங்களாவாக இருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போதோ ஒரு பயத்துடன் நுழைகிறார் சாயாசிங். குளிக்கும் போது கூட கதவைத் திறந்து வைத்துக் கொண்டு குளிக்கும் அளவிற்கு பயம் கொண்டவர் இவர். காரணம் இவருக்கு இருக்கும் கிளீனோபோபியா வியாதி. ஆனால் இவருடைய சிறு வயது மகன், அந்த வீட்டுக்குள் எந்த பயம் இல்லாமல் சுற்றி வர ஆரம்பிக்கிறான். இன்னும் பேச வராத இவனுக்கு மட்டும் அந்த வீட்டில் நடக்கும் சில விஷயங்கள் தெரிய வருகின்றன.ஒரு கட்டத்தில் நந்தாவை ரவுடிகள் வந்து மிரட்டி விட்டு வீட்டிற்கு வெளியிலேயே காவலுக்கு நிற்கிறார்கள். நந்தாவின் வியாபார பார்ட்னரும் நந்தாவைத் தேடி இந்த வீட்டிற்கு வருகிறார்.ஒரு சந்தர்ப்பத்தில் சாயாவுக்கும் அந்த வீட்டில் ஏதோ இருப்பதாகத் தோன்ற பயத்தின் காரணமாக வீட்டை விட்டு கோபமாக வெளியேற முயல்கிறார். சாயாவை வீட்டிற்கு வெளியில் இருக்கும் ரவுடிகள் வெளியேற விடாமல் தடுக்கிறார்கள், பின்னர்தான் மனைவியிடம் உண்மையை சொல்கிறார். ஒருவரிடம் வாங்கிய 50 லட்ச ரூபாய் கடனுக்காக அவர்கள் இவரை ஏறக்குறைய அவர் இருக்கும் ஆனந்தவிலாஸ் வீட்டிலேயே ஹவுஸ் அரெஸ்ட்டாக வைத்து விடுகிறார்கள். கடனில் இருந்து மீள்வதற்கு அந்த வீட்டை விற்க முயல்கிறார் நந்தா. ஆனால் திடீரென எங்கிருந்தோ பறந்து வரும் ஒரு கைத்தடி நந்தாவை பலமாக அடிக்கிறது. இதன் பின்னர்தான் அந்த வீட்டில் விபத்தில் மரணமடைந்த தன்னுடைய அப்பா, அம்மாவின் ஆவி இருப்பதாக நம்புகிறார் நந்தா. இதன் பின் நடக்கும் திகிலூட்டக்கூடிய பரபரப்பான சம்பவங்கள்தான் படத்தின் மீதி கதை.

நந்தா, சாயாசிங் இருவருக்குமே பொருத்தமான கதாபாத்திரங்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பொருத்தமான ஜோடிகளாகவே இருக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை (அதாவது சண்டை, காதல், பாசம், அன்பு, வேறு எதுவும் கிடையாது) யதார்த்தமாகவே செய்திருக்கிறார்கள். முதலில் சாயாசிங்க அந்த வீட்டைப் பற்றி பயப்படுகிறார், பின்னர் நந்தா பயப்பட ஆரம்பிக்கிறார். மற்ற உணர்வுகளை விட பயம்தான் பெரிதாக இருக்கிறது படத்தில்.

இவர்களின் மகனாக நடித்திருக்கும் குட்டி பையன் அதிகம் கவர்கிறார். பேசாமலேயே அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறான்.

ஒளிப்பதிவு , பின்னணி இசை, எல்லாம் ஓகே ரகம்தான். கிராபிக்ஸ் காட்சிகள்தான் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சில காட்சிகளில் கிராபிக்ஸ் என்பது எளிதில் தெரிந்து விடுகிறது. அந்தரத்தில் தொங்குவது , பெட்ஷீட் தானாக மேலே போவது போன்ற காட்சிகளில் கம்பி கட்டி தூக்குவதை சாதாரண ரசிகரும் புரிந்து கொள்வார்கள். ஒரு வீட்டுக்குள்ளேயே கதை நடப்பதால் கொஞ்சம் அலுப்புத் தட்டவே செய்கிறது.

சின்னத்திரையில் தொடர்களை பார்ப்பதற்கு அதிகமாக பயமுறுத்திய நாகா பெரிய திரையில் அவ்வளவாக பயமுறுத்தவில்லை.

3 கருத்துகள்:

ஷைலஜா சொன்னது…

தெளிவான விமர்சனம் மிக்க நன்றி. இதை ஆனந்தபுரத்துவீடு கதையின் சொந்தக்காரர் திரைக்கதைவசனம் எழுதிய இந்திரா சௌந்தர்ராஜனுக்கு அனுப்பிவிடுகிறேன் அவர் என் கசின் என்பதால்!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

is it the remake of orginal mallu film or diffrt story line

kavi சொன்னது…

@ஷைலஜா - தெளிவான விமர்சனம் என்றதற்கு என் நன்றி
@ramji - it is not a diffrt story line, but i expect more from the director naga, because his full strength not exposed in this film, tx for your comment