செவ்வாய், 6 ஜூலை, 2010

ராவணன் சாதித்ததா ?




மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னத்தின் ராவ(ண)ன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி விட்டதென்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு பல காரணங்களை அடுக்கலாம். விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பல கருத்துக்களை எழுப்பிய படம் இந்தியைப் பொறுத்த வரையில் படுதோல்வி என்று சொல்ல வைத்திருக்கிறது. ராவண் வெளியான முதல் வாரத்தில்
23,23,15,636 ரூபாய் வசூலானது என பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் கடந்த வாரம் அதாவது இரண்டாவது வாரத்தில் இந்த படம் வசூலித்தது வெறும்
2,72,40,680 ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. (நன்றி - யாகூ மூவிஸ்) இதிலிருந்தே இந்த படத்தின் வெற்றியின் அளவை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ராவணனைப் பொறுத்த வரையில் படம் வெளியான முதல் வாரத்தில் (சென்னை மட்டும்) 2 கோடிக்கு மேல் வசூலானது. ஆனால் இரண்டாவது வாரம் வசூலான தொகை வெறும் 54 லட்சம் (சென்னை மட்டும்) மட்டுமே. நன்றி - பிஹின்ட்உட்ஸ்.காம்

ரசிகர்களின் தெளிவான நிலையையே இந்த மாபெரும் (வெளியாவதற்கு முன்) படத்தின் வெற்றி புரிய வைக்கிறது.

கருத்துகள் இல்லை: