செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
விஜய்யின் ‘ஜில்லா’, யார் கட்டப் போறாங்க ‘கல்லா’
தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கப் போகும் படம் ‘ஜில்லா’. விஜய்யை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சூப்பர் குட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
இதற்கிடையே இந்த படத்தை அப்படியே மொத்தமாக வாங்க ஜெமினி நிறுவனம் பேசி வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தையும் இந்த நிறுவனமே வாங்கியது, படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்து ‘கடல்’ படத்தை வாங்கி கடினப்பட்டு விட்டார்கள்.
இப்போது விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தை வாங்கி மீண்டும் ‘கல்லா’ கட்ட தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.
முறையான அறிவிப்பு வரும் வரை, பெரிய படங்களுக்கு இப்படி பல தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கும்…பார்ப்போம் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதென்று….
விக்ரமனின் 'நினைத்தது யாரோ' - திரைப்பட முன்னோட்டம்
விக்ரமன் இயக்கத்தில் உருவாகி வரும் நினைத்தது யாரோ திரைப்பட முன்னோட்டம்
அபிஷேக் பிலிம்ஸ் சாரபில் பி. ரமேஷ், டி. இமானுவேல் இருவரும் தயாரிக்கிறார்கள்.
ரிஜித் நாயகனாகவும், நிமிஷா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மற்றும் பினிஷ், லியோ, கிரி, ரித்விகா, சுபிக்ஷா, கார்த்திக் யோகி, அசார், அஸ்வத், சாய்பிரசாத், பிரசாத், பிரதீப், பானு என எல்லோருமே இந்த படத்தில் புதுமுகங்கள் தான்.
இசை – பால்ராஜ், ஒளிப்பதிவு – ஆர்.கே. பிரதாப், படத்தொகுப்பு – ரிச்சர்ட், கலை – ஜனா, ஸ்டண்ட் – தளபதி தினேஷ், பாடல்கள் – பா.விஜய், கலைக்குமார், வைரபாரதி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ். அருணாச்சலம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விக்ரமன்.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.....
லேபிள்கள்:
நினைத்தது யாரோ,
விக்ரமன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)