புதன், 15 ஜூலை, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்


படத்தோட ஸ்டில்சும் , படத்தைப் பத்தின டிரைலரும், விளம்பரமும், அதோட டைட்டில்ல இருந்து எல்லாமே கொஞ்சம் அச்சப்பட (அதாவது பயப்பட) வச்சாலும், பயமில்லாம படத்தைப் பார்த்துட்டு வரலாம்.


அமெரிக்கா , நியூ ஜெர்சியில இருக்கிற அழகான குடும்பமான பிரசன்னா, சினேகா தம்பதியர் வீட்டுல நடக்கிற விஷயங்கள்தான் படத்தோட கதை. இன்னும் விரிவா சொன்னால் நல்லா இருக்காது. சொல்ல வந்த விஷயத்தை , பாடல்கள், தேவையில்லாத காட்சிகள், சண்டைகள், நகைச்சுவைங்கற பெயர்ல கடிகள்னு இல்லாம தெளிவா கொடுத்திருக்காரு அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதன்.


பிரசன்னா, சினேகா ஜோடி ரொம்ப பொருத்தமா இருக்கு. இரண்டு பேருமே அழகா இருக்காங்க, அழகாவும் நடிச்சிருக்காங்க. ஒரு வீடு, ஆபிஸ் இங்க மட்டுமே நடக்கிற கதைதான், கொஞ்சம் சுவாரசியத்தை குறைச்சிடுது. இருந்தாலும் வழக்கமான தமிழ் சினிமா பார்க்கிற பீலிங் இல்லாம இருக்கு. அதுக்கு அமெரிக்காவுல கதை நடக்கிறதும் காரணமா இருக்கலாம்.


அங்கங்க சின்ன சின்ன பாடல்கள் வருது. கார்த்திக்ராஜா இசை அருமையாவே இருக்கு. ரெட் (அஜித் காமிரா இல்லீங்க ? ) காமிராவுல ஷுட் பண்ணி வந்திருக்கிற முதல் தமிழ் படம்.


படத்தோட கடைசியில சொல்ற தகவலைப் பார்த்தால் ஆச்சரியமாவும், அதிர்ச்சியாவும் இருக்கு. எது எதுலயோ முதல் இடத்துல இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனால் அதுல முதல் இடமா ? பயமாத்தான் இருக்கு.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனால் படத்தை ரசிக்கலாம்.

சனி, 11 ஜூலை, 2009

இந்திர விழா, வாமனன், வைகை - குறைவான விமர்சனம், குறையான விமர்சனம் அல்ல
































இந்திர விழா

கதைன்னு சொல்லிக்க பெருசா ஒன்னும் இல்ல. டிவி சேனல்ல ஹெட்டா இருக்கிற ஸ்ரீகாந்துக்கும் அந்த சேனல் ஓனர் மனைவி நமீதாவுக்கும் இடையே நடக்குற சண்டைதான் படத்தோட கதை.

நமீதா அடிக்கடி நீச்சல் உடையில வந்து அசத்தறாங்க

படத்துல பாட்டுலாம் வருது... ஆனால்....

விவேக்கும் இருக்காரு படத்துல....ஆனால்....சிரிப்புத்தான் வரல.....

வாமனன்

சினிமாவுல நடிக்கிற ஆசையில சென்னைக்கு வர்ற ஜெய், தேவையில்லாம ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிறாரு, அதுல இருந்து எப்படி தப்பிக்கிறாருங்கறதுதான் படத்தோட கதை.

தனி ஹீரோவா நடிக்க ட்ரை பண்ற ஜெய் கதையை எப்படி செலக்ட் பண்றதுன்னு கத்துக்கணும். அப்படிதான் ஜெய் ஜெயமாக முடியும்.

லக்ஷ்மி ராய் மாடலிங் நடிகையா வர்றாங்க. பளபளன்னு நீச்சல் உடையில வந்து பார்க்க(?) வைக்கறாங்க.

சந்தானம்தான் படத்தை கொஞ்சம் காப்பாத்தறாரு.

யுவன் இசையாம். சொன்னால்தான் தெரியுது..யுவன் எங்கே உங்க இனிமையான இசை...என்ன ஆச்சி....

வைகை

காதலும் காதல் சார்ந்த இடமும்னு டைட்டில்ல கூடவே வருது.

மதுரை பக்கம் போயி கொஞ்சம் விசாரிச்சால் தமிழ் சினிமாவுக்கு நல்ல நல்ல கதைகள்லாம் கிடைக்கும் போல இருக்குது. கிளைமாக்ஸ்லதான் காட்டறாங்க உண்மைக்கதைன்னு...இன்னும் கொஞ்சம் உருக வச்சிருக்கலாம்.

மற்றபடி படத்துல உண்மையிலேயே யதார்த்தம் நல்லா இருக்கு. ரகசியா பாட்டைத் தவிர.

புதுமுகங்கள்தான் ஹீரோ, ஹீரோயின், ரெண்டு பேருமே குறை வைக்காம நடிச்சிருக்காங்க.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டை, ரீமிக்ஸ் பண்ணி கெடுக்காம அதே டியூனோட வேற பாடகர்களை வச்சி பாட வச்சிருக்காங்க.

வைகை , வாகை சூட வாய்ப்பிருக்கு. மற்றபடி இந்திர விழாவுக்கு விழா எடுக்க முடியுமான்னு தெரியல. வாமனன், வாடிப்போயிருக்காரு.